Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, October 31, 2009

எனக்கு பிடித்த சில கவிதைகள்

வாசித்த கவிதைகளில் பிடித்த சில கவிதைகளை பகிர்கிறேன்...



நானென்பது யாரென்று
புரியவில்லை
வெறும் புத்தகங்களா
நண்பர்களின் சாயைகளா
அனுபவங்கள் என்று நம்பப்படுகின்ற
புனைவுகளா
காலத்தின் படர்ந்து திரியும்
மூதாதைகளா
எனது உடல் எதனால்
          நிரப்பட்டிருக்கிறது.          
-- லஷ்மி மணிவண்ணன்






ஒரு தரம் காதல்
என்னை மீட்டு தந்தது
ஒரு தரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத்தந்தது
ஒரு வண்ணாத்துப்பூச்சியும்
என்னை மீட்டுத்தந்தது
நான் தான் அடிக்கடி
தொலைந்து விடுகிறேன்
-- பூமா ஈஸ்வரமூர்த்தி

 


காதலிப்பதை போல்
பாசாங்கு செய்யாதே!
காதல் நம்
ஆணைக்கு படியாது!
-- ஆலன் வாட்ஸ்