நானென்பது யாரென்று
புரியவில்லை
வெறும் புத்தகங்களா
நண்பர்களின் சாயைகளா
அனுபவங்கள் என்று நம்பப்படுகின்ற
புனைவுகளா
காலத்தின் படர்ந்து திரியும்
மூதாதைகளா
எனது உடல் எதனால்
நிரப்பட்டிருக்கிறது.
-- லஷ்மி மணிவண்ணன்
ஒரு தரம் காதல்
என்னை மீட்டு தந்தது
ஒரு தரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத்தந்தது
ஒரு வண்ணாத்துப்பூச்சியும்
என்னை மீட்டுத்தந்தது
நான் தான் அடிக்கடி
தொலைந்து விடுகிறேன்
-- பூமா ஈஸ்வரமூர்த்தி
காதலிப்பதை போல்
பாசாங்கு செய்யாதே!
காதல் நம்
ஆணைக்கு படியாது!
-- ஆலன் வாட்ஸ்


