Tuesday, December 1, 2009

எனக்கு பிடித்த பாடல் 1





படம் : தேவதை
பாடியவர் : S.P.B.சரண், சந்தியா
இசை: இசைஞானி 'இளையராஜா'



தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வெக்கத்தில
பக்கத்துல நெருப்பா அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல

(தீபங்கள் பேசும் ...)

முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய
என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று
முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய
பொன்னான நாள் பார்த்து
கொண்டாடும் கை கோஅர்த்து
குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்றுதானோ

(தீபங்கள் பேசும்... )

நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வான விளக்கு
இருக்கும் பொது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு
கனவை கூட கவிதையாகி புலம்பும் இளைய கவியே
கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே
வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம்
கண்ணிமையே ஓடாதே என் கனவை தேடாதே
அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்றுதானோ

(தீபங்கள் பேசும்... )










இது தீபாவளிக்கான பாடலோ அல்லது கார்த்திகை விளக்கீட்டுக்கான பாடலோ என்று தெரியவில்லை.  

4 comments:

Unknown said...

இரண்டுக்குமே பொருந்தும் இந்த பாடல், ஆனால் படத்தில் தீபாவளிக்கு தான் வருகிறது என்று நினைக்கிறேன்

Unknown said...

நன்றி சஞ்சீவன்! நான் படம் பார்க்கவில்லை.

jeyamee said...

அழகான பாடல் மாறன்.
வரிக்களுக்கு சொந்தக்காரர் யாரென்று குறிப்பிட‌வில்லை...

Unknown said...

இதுவரை தேடினேன் கிடைக்கவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன் jeyameee!