Tuesday, November 3, 2009

இரண்டாவது சூரியனும் 2012ம்...

இப்போது பரவலாக 2012 இன் உலக முடிவைப்பற்றிப் பேசப்படுகின்றது..என்ன இது என்று தேடியபோது கிடைத்த சில தகவல்கள் உங்களுடன்.....

1) மாயன் கலண்டர்.




இது ஆதிவாசிகளினால் மத்திய அமெரிக்காவில் எழுதப்பட்ட ஒரு கலண்டர். இவ்வளவு காலமும் மாயன் கலண்டரிலுள்ள விதத்திலே உலகம் இயங்கி வந்துள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன. இவர்களின் கணிப்பீடு வானசாஸ்திரத்தில் கிட்டதட்ட சரியாகவே இதுவரை உள்ளது. (உ+ம்) பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே lunar cycle (The time between two full moons) இன் காலத்தை 29.5300 நாட்கள்(days) என கண்க்கிட்டுள்ளார்கள், ஆக 34 sec தவறு! இவர்களின் கலண்டர் பூமியின் இறுதி 21 DEC 2012 என்கிறது. lunar cycle இன் கணிப்பீட்டின் உடன் ஒப்பிட்டால் 2012 இல்???...

2. Super Volcano


வற்றிவரும் ஆறு

அமெரிக்கவின் Yellowstone National Park இலுள்ள மிகப்பெரிய எரிமலை (super volcano) 2012 அளவில் வெடித்து சாம்பலை கக்குமென பூகோளவியளாளர்கள் (geologist) எதிர்வு கூறியிருக்கிறார்கள், இது வெடித்தால் வெளிவரும் சாம்பல் புகைமண்டலம் சூரிய வெளிச்சத்தை மறைத்து பெருவெடிப்பு எனப்படும் big bang க்கு ஈடாக 15000 வருடங்களுக்கு பூமியை குளிர்நிலைக்கு இட்டுச்செல்லுமாம். விளைவு??

3. நிபிரூ (இரண்டாவது சூரியன்)

இந்த கோள் 3600 வருடங்களுக்கு ஒருமுறை பூமியின் அருகே வந்து செல்வதாகவும், அதில் வேற்றுக்கிரக வாசிகள் வந்து தங்கள் இஷ்டப்படி பூமியிலுள்ள மனிதரை (மனித குரோமோசோம்களை) மாற்றி தங்கள் தேவைகளை நிறைவேற்றிச்செல்வார்களாம்....
இவ்வாறுதானம் குரங்கு முக சாயல் கொண்ட நாம் மனித முகத்திற்கு மாறினோமாம்! இந்தக்கதை ஈராக்கில் அன்று கோலோங்கியிருங்த சுமேரிய நாகரிகத்தில் கிடைத்த எச்சங்களில் இருந்து, அவர்களின் சுவடுகளில் கூறப்பட்டுள்ளது.




விஞ்ஞானப்படி இப்படி ஒரு கோள் பூமியை நெருங்கும் போது பூமியின் ஈர்ப்பு விசைகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்ப்படுவதால் பூமி மிகவும் அல்லகோலப்படும். அப்படித்தான் அந்த காலத்தில் டைனோசர்கள் அழிந்து போயின, ஐஸ்யுகம் மறைந்து போயின, அட்லாண்டிஸ், லெமூரியா போன்ற கண்டங்கள் திடுமென கடலுக்குள் மூழ்கின. கொழித்திருந்த நாகரீகங்கள் பல அழிவுக்கு வந்தன என கூறப்படுகிறது.




1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக, மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது, 7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக, அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட Eris என்ற கோள்தான் அது என்கின்றனர்.

ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரூ” தான் என்கின்றனர். அது இப்போது பூமியை மிகவும் நெருங்கி வந்துவிட்டதாகவும் தென் துருவ பகுதிகளில் இப்போதெல்லாம் வெறும் கண்ணுக்கும் தெரியும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அடுத்த வருட மத்தியில் அது நம் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும் அளவுக்கு அருகே நெருங்கிவிடுமாம். 2012-ல் அது இன்னும் நம் பூமியை மிகவும் நெருங்கி அது அதன் பாதையில் கடந்து போகுமாம். அப்போது அது இரண்டாவது சூரியன் போல வானில் காட்சி அளிக்குமாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அமெரிக்க அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர் அக்கூட்டம். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம்.




இன்றைக்கும் பூமியில் நிகழும் அநேக தட்பவெப்ப மாறுதல்களுக்கும், தட்டுகள் அனாயசமாய் உராய்ந்து உருவாகும் பூமிஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளுக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிபிரூ தான் காரணம் அது இன்னும் நெருங்க நெருங்க அதன் தாக்கம் இன்னும் இன்னும் பூமியில் அதிகரிக்கும் என்பது அவர்கள் கருத்து. இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாய் போய் பூமியை நிபிரூ அனுனாக்கிகள் (நிபிரூவில் வரும் வேற்றுக்கிரக வாசிகள்) கொள்ளை அடிப்பதால் பூமியிலிருந்து இலட்சக்கணக்கானோர் திடீரென காணாமல் போய்விடுவர் என்றும் அதனால் நிபிரூ கும்பலுக்கும் பூமியின் மனிதர்களுக்கும் போர் நேரிடலாமென்றும் கதை விடுகின்றனர்.

நாசா இந்த நிபிரூ கதைகளையெல்லாம் சுத்தமாய் மறுக்கின்றது.
http://astrobiology.nasa.gov/ask-an-astrobiologist/question/?id=2759





"எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றகவே நடக்கும்".வேறு என்னத்தை சொல்ல?